சென்னை: தி.நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, மேற்கண்ட பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர், பெட்டிக் கடைகளில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி செல்வது தெரியவந்தது.