இந்தோனேசியா: இந்தோனேசியாவில் இருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட 737 - 500 ரக விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜகார்த்தாவில் இருந்து ஃபோண்டியானாக் பகுதி அருகே சென்ற போது விமானத்தை காணவில்லை. ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது; போயிங் 737 ரகத்தை சேர்ந்தது.