ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் கோபால், அப்பகுதியில் பழைய கல்வெட்டுகள் இருப்பதாக தெரிவித்ததன் பேரில், வரலாற்று ஆய்வாளர்கள் ஆசிரியர் அரிஸ்டாட்டில், முனைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஊரின் எல்லைப்பகுதியில், ஊரின் பெயருடன் நடப்பட்டுள்ள கல்வெட்டை கண்டுபிடித்தனர்.