கரூர்: கரூர் சுக்காலியூர் அண்ணா நகர்ப்பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அண்ணா நகர்ப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டித் தரப்பட்டது.