டாஸ்மாக் கல்லாபெட்டியை உடைத்து பணம் திருட்டு; கொள்ளையன் போலீசில் ஒப்படைப்பு

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் பிரவீன் குமார்(26) என்பவர் ேமற்பாவையாளராக பணியாற்றி வருகிறார். இங்கு 5 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கல்லாப்பெட்டியில் ₹ 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை வைத்து விட்டு ஊழியர்கள் பக்கத்து அறையில் தூங்க ெசன்றுள்ளனர். அப்போது, நள்ளிரவில் கல்லாப்பெட்டி உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து ஊழியர்கள் எழுந்து வந்து பார்த்துள்ளனர்.  அப்போது, மர்ம நபர் ஒருவர் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். அவரை, மடக்கிப் பிடித்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை யில் மதுரவாயலை சேர்ந்த பாலன்(24), என்பதும் டாஸ்மாக்கில் நுழைந்து கல்லா பெட்டியில் இருந்த  1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை திருடி செல்லும்போது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. மேலும், இதுபோல் வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: