சென்னை: விருதுநகர், தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் ₹85 கோடியில் கட்டப் பட்ட புதிய பாலங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் சேலம் மாவட்டம், திருச்செங்கோடு - அரியானூரில் ₹45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - அய்யனார்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகர், தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை - உடன்குடி சாலை மணிநகர், புதுக்கோட்டை மாவட்டம் செங்கமேடு - மணமடை - வெட்டிக்காடு சாலை, தேனி மாவட்டம் பூலாநந்தபுரம் - குச்சனூர் சாலை, பூலாநந்தபுரம், கோயம்புத்தூர் மாவட்டம் காந்திஜி சாலை கண்ணப்பன் நகர், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே, சேலம் மாவட்டம் புழுதிக்குட்டை - சந்துமலை சாலை, புங்கமடு, சேலம் - உளுந்தூர்பேட்டை - அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே என மொத்தம் ₹85 கோடியே 73 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்.