திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகாவிற்குட்பட்ட அதிகத்தூர், பிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஆற்றங்கரை ஓரம், ஏகாட்டூர் ஆகிய ஊராட்சிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் இன மக்கள் பட்டா வழங்கக் கோரி பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2.11.2020 அன்று நடைபெற்ற பேச்சு வார்ததையின் போது 15 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் இதுவரை பட்டா வழங்காததைக் கண்டித்து பட்டா வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருளர் மக்கள் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.