பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா தினமும் விவாதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ. மீது தேவையில்லாத குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்று பா.ஜ. மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.
தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நளின்குமார் கட்டீல் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது, ``முன்னாள் முதல்வர் சித்தராமையா தினமும் எதாவது ஒரு கருத்து தெரிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியில் அவரை ஒழித்து விடுவார்கள். இதனால் பா.ஜ. மீது தேவையில்லாத குற்றசாட்டுகளை தெரிவித்து நானும் அரசியலில் இருந்து வருகிறேன் என்று காட்டி வருகிறார். சித்தராமையாவுக்கு பசுவதை சட்டம், ஆர்.எஸ்.எஸ். மீது கோபம் கிடையாது. கட்சியில் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க டி.கே.சிவகுமார் மீது உள்ள கோபத்தை பா.ஜ. மீது காட்டி வருகிறார்.