செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கு வரும் 25ம்தேதி பெங்களூருவில் திருமணம் நடக்கவுள்ளதையொட்டி சொந்த ஊரான தும்பை கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கசென்றனர். இந்நிலையில் நேற்று அனைவரும் கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றனர். கிணற்றின் படிக்கெட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது நாராயணனின் இளைய மகளான கல்லூரி மாணவி சுதா (19) நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.