திருப்பத்தூர் :அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளன என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பரப்புரை செய்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், “தமிழகம் ஒரு முக்கியமான அரசியல் திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும் என்று விமர்சகர்கள் சொல்ல சொல்ல நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை இன்னும் வளர்த்து கொண்டே இருக்கிறீர்கள். இங்கு கூடியிருப்பவர்கள் பிரியாணிக்காக கூடியவர்கள் அல்ல. இந்த கூட்டம் ஏமாற கூடாது என்றால், ஆர்வமுள்ளவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக சேருங்கள்.