புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 41 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். உருமாறிய கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி வரும் 13-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கவுள்ளது.