துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தது ஏன்?: வைகோ விளக்கம்

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உடனான சந்திப்பு ஏன் என்பது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது,  வைகோ சார்பில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அப்போது வெங்கையா நாயுடு தரப்பில் இது தொடர்பாக, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், ஆலோசித்து முடிவெடுப்பதாக வைகோவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: