அதிமுக கூட்டணியில் தமாகா பலத்திற்கேற்ப தொகுதிகளை பெறுவோம்: நெல்லையில் ஜி.கே.வாசன் பேட்டி

நெல்லை: சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரசின் தென்மண்டல மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான ஆயத்த பணிகளை தமாகா தொடங்கியுள்ளது.  தமாகா பலமாக இருக்கும் தொகுதிகளில் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். நாங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் பலத்திற்கேற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். எங்களுக்கு நியாயமான இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: