உடன்குடி: ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு மணப்பாடு கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் தென்தமிழகத்தின் சுற்றுலாத்தலம் மணப்பாடு. மணப்பாடு கடல் ஒருபுறம் ஆரவாரமாகவும், மறுபுறம் அமைதியாகவும் காட்சியளிப்பது சிறப்பாகும். மணப்பாடு கடற்கரையையொட்டி புனிதர் சேவியர் தங்கிய குகை, மணல் குன்றின் மீதுள்ள ஆலயம் என பல்வேறு சிறப்புகளை உள்ளிடக்கியது. மற்றொரு சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது.