உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த போக்குவரத்து கழக பணிமனையின் அருகில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், சீட் கவர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.