அகமதாபாத்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய மர்ம தூண், குஜராத்திலும் தோன்றியுள்ளது. பூமிக்கு அப்பாற்பட்டு மற்ற கோள்களிலும் வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்களை கண்டுபிடிக்க, தொடர்ந்து முயற்சிகள் செய்யப்படுகின்றன. வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை மனித குலத்திற்கு ஏற்படுத்தக் கூடிய பல அபூர்வ சம்பவங்கள், உலகில் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சமீப காலமாக பல்வேறு நாடுகளை அச்சுறுத்துக் கொண்டிருக்கும் ‘மர்ம தூண்.’அமெரிக்காவில் உள்ள யூட்டா பாலைவனத்தில் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி உலகிலேயே முதல் முறையாக இந்த மர்ம தூண் காணப்பட்டது. ‘மோனோலித்’ எனப்படும் இந்த உலோகத் தூண், அடுத்த நாட்களில் திடீரென மறைந்து விட்டது.பின்னர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ருமேனியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து காணப்பட்டு, மீண்டும் மறைந்தது.