மதுரை: தமிழகத்தில் நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. கமல்ஹாசன் தனியார் டிவி நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார். 3 நாட்கள் பிரசாரத்திற்கு வருவார். அதன்பிறகு சூட்டிங் சென்று விடுவார். அடுத்து அவரது பட சூட்டிங்கிற்கு சென்று விடுவார். மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள்தான் இருக்கிறோம். கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது.