காஷ்மீரில் நகைக்கடை அதிபர் சுட்டுக் கொலை

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தின் பரபரப்பான ஸ்ரீநகர் மார்க்கெட்டுக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதிகள் நகைக்கடை அதிபரை சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஸ்ரீநகரின் பரபரப்பான சந்தைப் பகுதியான சாராய் பாலாவில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் ஒரு நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொன்றனர்.

கடைவீதியில் செயல்படும் பிரபல நகைக்கடையான நிசால் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சத்பால் நிசால் வயது (62), குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் நகைக்கடை அதிபரை ஏன் குறிவைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: