உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் 5,043 பேருக்கு நல உதவி: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் 5,043 பேருக்கு நல உதவி வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், 5000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், 43 மாணவர்களுக்கு தலா ₹5000 கல்வி உதவிதொகை  என 5,043 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி அருகில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கே.கண்ணன், மு.இராசா மற்றும் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜன், வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை தெற்கு  மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பங்கேற்று 5,043 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ப.தாயகம் கவி, வாகை சந்திரசேகர், எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் எஸ்.ஜோயல், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், கவிஞர்  காசிமுத்து மாணிக்கம், அன்பகம் கலை, மு.மகேஷ்குமார், க.சோமு, பி.மணிமாறன், சென்னை த.அரங்கநாதன், எஸ்.குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் கே.சதிஷ்  கண்ணன், எஸ்.விஜயகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories: