சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுடன் தரிசனம் செய்தார். அப்போது அவர், ஜனவரி 22ம் தேதி முதல் 5 நாட்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி, அரசியல் நிலைபாடு தெரிவிப்பேன் என கூறினார். நடிகர் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.