நடிகை குஷ்பு பேட்டி முதல்வர் வேட்பாளர் யார் என பாஜ மேலிடம் தான் அறிவிக்கும்

சென்னை:சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பாஜ நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஐஸ்ஹவுஸில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பாஜ மீனவர் அணி தலைவரும், ெதாகுதி அமைப்பாளருமான சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் தொகுதி பொறுப்பாளர், நடிகை குஷ்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடிகை  குஷ்பு அளித்த பேட்டி: நான் இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்கவா, வேண்டாமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடியை ஏற்கவில்லை என்று யாரும் கூறவில்லை. பாஜ கூட்டணி முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கட்சி தலைமை தான் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: