சட்டசபை தேர்தல் மேலும் 16 தொகுதிகளுக்கு பொறுப்பாளர் நியமனம்: தமிழக பாஜ அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிவிப்பு: சட்டமன்ற தொகுதி வாரியாக அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்படாத தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தற்பொழுது நியமிக்கப்படுகின்றனர். அதன்படி சென்னை அண்ணாநகர் தொகுதி அமைப்பாளராக பாஜ இளைஞர் அணி பொருளாளர் ஜி.கே.சுரேஷ் கர்ணா, பொறுப்பாளராக பாஜ கலை மற்றும் கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதி அமைப்பாளராக பாஜ மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்பியுமான சி.நரசிம்மன், பொறுப்பாளராக ஓ.பி.சி.பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு தொகுதி அமைப்பாளர்களாக மாவட்ட தலைவர் என்.வசந்தராஜன், சிறுபான்மை அணி மாநில பொது செயலாளர் ஜான்சனும், பொறுப்பாளராக பாஜ துணை தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: