கோவை: கோவை மாநகரில் நடப்பாண்டில் 827 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்னை, மதுப்பழக்கம், காதல் தோல்வி, வேலையின்மை, வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமை, மன ரீதியான பிரச்னைகள் போன்றவற்றால் தற்கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் நடப்பாண்டில் இது வரை 827 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் ஆண்கள். இவர்களில் மதுப்பழக்கத்தால் தற்கொலை செய்து உயிரை மாய்த்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.