கேப் டவுன்: புதியவகை கொரோனா அச்சத்தால் தென்னாப்பிரிக்காவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசின் புதிய வகை தொற்றால், அனைத்து நாடுகளும் விழிப்புணர்வுடன் உள்ளன. அதன் தொடர்ச்சியாக பல நாடுகள் இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.