திண்டுக்கல்: குடும்ப சொத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தேசியக் கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாலமுருகன். இவரது தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி பெயர்களில் கோதைமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் ஏராளமான ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், அரசு தரப்பில் ஆதிதிராவிடர்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாலமுருகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அரசு புறம் போக்கு நிலத்தில் குடியிருப்பதாக கூறப்படுகிறது.