தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணைக்கு அருகே சாத்தனூர், கொழுந்தம்பட்டு, வீராணம், தரடாப்பட்டு, கீழ்வணக்கம்பாடி, மேல்கரிப்பூர் ஆகிய ஊராட்சிகளில் ஏரிகள் அமைந்துள்ளது. இந்த ஏரிகளை நம்பி பாசனம் செய்து வரும் விவசாயிகள், சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.