மாமல்லபுரம்: கிருஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, நேற்று மாலை, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் மற்றும் கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.