சேற்றில் இறங்கி அறுவடை அழுகிய நெற்பயிரில் கிடைப்பதை சேகரிக்கும் விவசாயிகள்

பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே  உள்ள விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெல்மணிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கியது. தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியாததால், நெல்மணிகளை சேகரிக்க முடியவில்லை.

தற்போது தண்ணீர் வற்றி, சேறும் சகதியுமான நிலத்தில் நெற்பயிர்கள் அழுகி உள்ளது. இதனால் கிடைக்கும் நெல்மணிகளை சேகரிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சேற்றில் இறங்கி ஆங்காங்கே கிடைக்கும் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

Related Stories: