திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனின் புகழ் பரப்புபவர்களுக்கு கேரள அரசு வருடந்தோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், இவ்வருட ஹரிவராசனம் விருதுக்கு பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு தினத்தன்று சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் 1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.