திருமலை: ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம். அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. இவர் 16 நாட்களுக்கு முன்பு தர்மாவரத்தில் உள்ள தேசிய வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியில் சேர்ந்தார். இதற்காக தினந்தோறும் தர்மாவரம் சென்று வந்தார். இந்நிலையில். நேற்று காலை வழக்கம் போல் வங்கிக்கு சென்றார்.
ஆனால். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால், பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து தர்மாவரம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். அதில், ‘வேலைக்கு சென்ற எங்கள் மகள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருக்கு கார்த்தி, ராஜேஷ் ஆகியோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்,’ என தெரிவித்தனர்.