சிக்கமகளூரு: சிக்கமகளூரு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட செல்லவுள்ள முதல்வர் எடியூரப்பா பேலூர் செல்லும் 4 வழி சாலையை திறந்து வைக்க இருப்பதாக மாவட்ட செய்தி தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட செய்தி தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் கூறும்போது, சிக்கமகளூரு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் செய்யப்பட்டுள்ளது.