முடிவில்லாமல் தொடரும் துயரம்: போலீஸ் அதிகாரி என மிரட்டி ஓட்டலில் பெண் பலாத்காரம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி எனக் கூறி பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டார். டெல்லி போலீசில் கடந்த செப்டம்பர் 6ல் பெண் ஒருவர் அளித்த புகாரில், ‘‘மத்திய டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து 28 வயது வாலிபர் பலாத்காரம் செய்தார்’’, எனக் கூறியிருந்தார். போலீசிடம் அவர் மேலும் கூறுகையில், என்னிடம் சில மாதம் நட்பை தொடர்ந்த அவர் அழைத்ததன் பேரில் லாட்ஜுக்கு சென்றேன். உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை உயர் பதவியில் உள்ளதாக கூறி என்னை நெருங்கி தவறாக நடக்க முயன்றார். நான் தடுத்து தப்பிக்கக் கருதிய போது, போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க முடியுமா என மிரட்டி என்னை சீரழித்தார் எனக் கூறினார்.

விசாரணை நடத்திய போலீசாருக்கு, அந்த வாலிமேலும் வேறு பல பெண்களுடன் பேசியதும் கண்டறியப்பட்டது.போலீசில் அந்த வாலிபர் சிக்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த சந்தீப் குமார் எனும் அந்த வாலிபர் தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டு உள்ளார்

Related Stories: