சிலி: கொரோனா வைரஸை அடுத்து, உருமாற்றம் அடைந்த வைரஸும் வேகமாக பரவி வருவதை அடுத்து தொற்று உள்ளவர்களை எளிதில் கண்டறிவதற்காக 4 கால் நண்பர்களின் உதவியை நாடியிருக்கிறது சிலி அரசு. சிலி நாட்டின் சாண்டியாகோ விமான நிலையத்தில் பரபரப்பாக சுற்றி வரும் இந்த மோப்ப நாய்கள் போதைப்பொருளை கண்டுபிடிக்க முயற்சி செய்வதாக நினைத்தால் தவறு. கொரோனா தொற்று உள்ளவர்களை விரைவாக வேறுபடுத்தி கண்டறிவதற்காக இந்த மோப்ப நாய்கள் பிரத்யேக பயற்சி பெற்றவை. கொரோனா கிருமி பாதிப்பு உள்ளோரின் வியர்வையை மோப்பம் பிடிக்கும் நாய்கள், அதிவிரைவாக அவர்களை அடையாளம் காண இவை பயிற்சி பெற்றுள்ளன. இதுகுறித்து சிலி உள்துறை அமைச்சர் ரோட்ரிகோ டெல்காடோ தெரிவித்ததாவது, தென் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக சிலியில் கொரோனாவை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.