அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட தடை: ஐகோர்ட்

மதுரை: குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதை தாமதித்து வந்ததாக சீதாராமன் மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மதுரை மாவட்ட போதைத் தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சீதாராமன் மற்றும் அவரது குடும்ப சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: