கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே பர்வதமலை கோயிலில் 10 லட்சம் மதிப்பில் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.இந்நிலையில், இக்கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு சென்னையை சேர்ந்த 4 பக்தர்கள் இடிதாங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதைய கலெக்டர் ராஜேந்திரன் பர்வதமலையை நேரில் பார்வையிட்டு, இடிதாங்கி மற்றும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர உத்தரவிட்டார். அதன்பேரில், கோயிலில் உடனடியாக இடிதாங்கி பொருத்தப்பட்டது. இது நாளடைவில் பழுதானது.