சென்னை: அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச கூடாது என்று கண்டித்த பெண் காவலரை, உருட்டுக்கடையால் தாக்கி மண்டையை உடைத்த கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (42), சென்னை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
ராஜி, ராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால், இதை கேட்காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.