முன்னறிவிப்பு இன்றி திடீர் வருகை டெல்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

புதுடெல்லி: பிரதமர் மோடி எந்த முன்னறிவிப்பும் இன்றி, டெல்லியில் உள்ள குருத்வாராவிற்கு நேற்று காலை சென்று வழிபாடு நடத்தினார். டெல்லியில் ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவிற்கு பிரதமர் மோடி நேற்று காலை திடீரென சென்றார். அங்கு குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்தினார். பிரதமரின் குருத்வாரா வருகையானது திட்டமிடப்படாத நிகழ்ச்சியாக இருந்தது. அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாததோடு, போக்குவரத்து தடை, மாற்றம் என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில், “ குருதேஜ் பகதூர்ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு பெற்ற ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு சென்று வழிபாடு செய்தேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். உலகம் முழுவதும் குரு தேஜ்பகதூர் ஜீயின்  அன்பினால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: