சென்னை: அரசு விழாவில் அல்லாமல் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பொங்கலுக்கு ரூ.2500 அளிக்கப்படும் என்று அறிவித்தது முறையா. இது பொங்கலுக்கு பரிசுத் தொகையா. வாக்குகளுக்கு முன்பணமா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.