தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள ரெஜினாசேலி துவக்கப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல் மற்றும் புதிய மாற்று திறனாளிகளுக்கு உடல் ஆய்வு சான்று வழங்குதலும் நடைபெற்றது. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நா.சுஜாதா முன்னிலை வகுத்து பயணாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கினார்.