கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கோவா மாநிலம், 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. பனாஜியில், 60-வது கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை நடைபெறும் சிறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.