மைசூரு: யார் மிட்டாய் கொடுக்கிறார்களோ அவர்களிடம் செல்லும் குழந்தை மாதிரி மேலவை தேர்தலில் நடந்து கொண்ட மஜத குறித்து பேச வேண்டாம் என்று மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் தெரிவித்தார். மைசூருவில் செய்தியாளர்களிடம் மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் கூறுகையில், மேலவை தலைவர் பதவி விவகாரத்தில் மஜத மிட்டாய்க்கு ஆசைப்படும் குழந்தை போல் நடந்து கொண்டது. பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே மஜத ஒரு குழந்தை மாதிரி. யார் மிட்டாய் தருகிறார்களோ அவர்களிடம் செல்லும் மஜதவை பற்றி பேச வேண்டாம். மேலவையில் நடந்த கலவரத்தின்போது மேலவையின் கதவுகளை செருப்பு காலால் உதைத்தனர்.
