சிக்கபள்ளாபுரா: மாநிலத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வரும் 2021-22ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களிடம் நுழைவு கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் அரசு மேற்ெகாண்டுவரும் முயற்சி காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. சர்வதேச மருத்துவ ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் தற்போது பின்பற்றி வரும் கோவிட்-19 விதிமுறையை தொடர வேண்டும். பெங்களூருவில் இயங்கிவரும் மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 2006ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த விரிவுரையாளர்கள் உள்பட அலுவலக ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.