ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வெற்றி கணக்கை தொடங்குமா ஒடிசா?: பெங்களூருடன் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 30வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் (கொல்கத்தா) -எப்.சி. கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 2வது பாதியில் ஆட்டம்  முடிய 5  நிமிடங்கள் வரை கோல் விழவில்லை. இந்நிலையில் 85 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா அற்புதமாக கோலாக்கினார். முடிவில் கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

6வது ஆட்டத்தில் 4வது வெற்றியை பெற்ற கொல்கத்தா (1 டிரா, ஒரு தோல்வி) 13 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. கோவா 6வது போட்டியில் 2வது தோல்வியை சந்தித்தது.  இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எப்சி-ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 டிரா என 9 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஒடிசா 5 போட்டிகளில் ஒரு டிரா, 4 தோல்வியுடன் 10வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் ஒடிசா களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 4 போட்டிகளில் பெங்களூரும், 2ல் ஒடிசாவும் வென்றுள்ளன.

Related Stories: