புதுச்சேரி: புதுச்சேரி அருகே டமீனவர் வலையில் 15 கிலோ எடையுள்ள டம்மி ராக்கெட் லாஞ்சர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மரக்காணம் கடல் பகுதியில் சுதாகர் என்பவரின் விசைப்படகில் 9 மீனவர்கள் மின்படித்து கொண்டிருந்தனர். அப்போது 15 கிலோ எடையுள்ள 3 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ராக்கெட் லாஞ்சரை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை எஸ்.பி.பாலசந்தர் ராக்கெட் லாஞ்சரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.