புதுச்சேரி அருகே டம்மி ராக்கெட் லாஞ்சர் சிக்கியதால் பரபரப்பு: ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி கடலோர காவல்படை விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே டமீனவர் வலையில் 15 கிலோ எடையுள்ள டம்மி ராக்கெட் லாஞ்சர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மரக்காணம் கடல் பகுதியில் சுதாகர் என்பவரின் விசைப்படகில் 9 மீனவர்கள் மின்படித்து கொண்டிருந்தனர். அப்போது 15 கிலோ எடையுள்ள 3 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ராக்கெட் லாஞ்சரை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.   தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல்படை எஸ்.பி.பாலசந்தர் ராக்கெட் லாஞ்சரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மீனவர் வலையில் சிக்கியது முப்படைகளில் பயன்படுத்தக்கூடிய டம்மி ராக்கெட் லாஞ்சர் என்றும் இது இலக்கை நோக்கி சுட பயன்படுத்தக்கூடியது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து ராக்கெட் லாஞ்சர் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: