ஈரோடு: ஈரோட்டில் அரசின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ஸ்ரீபதி அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஸ்ரீனிவாசன், சேகர், பூபதி ஆகியோர் இயக்குனராக பணியாற்றி வருகின்றனர். கட்டுமானம் மட்டுமின்றி போக்குவரத்து, ரியல் எஸ்டேட், மசாலா தயாரிப்பு, கல்குவாரி, திருமண மண்டபம் என பல்வேறு தொழில்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஸ்ரீபதி அசோசியேட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், இயக்குனர்களின் வீடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 2வது நாளாக நடைபெற்ற சோதனையில் 16 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.