வால்பாறை: மானாம்பள்ளி வனப்பகுதியில் விழுந்து கிடந்த யானைக்கு, வனத்துறை ஊழியர்கள் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர். வால்பாறையை அடுத்து உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியகல்லார் எஸ்டேட் வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக நடக்க முடியாமல் காட்டு யானை ஒன்று விழுந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பக துணைக்கள இயக்குநர் சேவியர் உத்தரவின்பேரில் யானைக்கு நேற்று முதற்கட்டமாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.