சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.!!!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம்  செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை தலைமை நீதிபதியாக கடந்த வரும்  நவம்பர் 11-ம் தேதி பதவியேற்றார்.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹியின் பதவிகாலம் வரும் டிசம்பர் 31- ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜி பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சஞ்ஜிப் பேனர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜி பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒடிசா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் தெரிவிக்கதாக தகவல்  வெளியாகிய நிலையில், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மகேஸ்வரி சிக்கிம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கோசுவாமி, ஆந்திர  உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: