சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் தலைப்பில் மூன்றாம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்கள் நாளை முதல் காணொளி காட்சி வாயிலாக தொடங்குகிறது. இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி / தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பிலான 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.