வூகான்: கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவின் வூகான் நகரத்தில் இதே தேதியில் தான் கண்டறியப்பட்டது. வூகானில் வெடித்து கிளம்பிய கொரோனா கொல்லுயிரி தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து வூகான் நகரம் பெருமளவில் மீண்டிருக்கிறது. சீனாவின் வூகான் மாநகரம், பல்வேறு நாடுகளில் வியமித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று இங்கிருந்து தான் பரவியதாக கூறப்படுகிறது. உலக நாடுகள் பல கொரோனா தொற்றின் 2ம் அலையில் சிக்கியுள்ள நிலையில், வூகான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அங்குள்ள யாங்கேஸ் ஆற்றுப்பாலம் முழுவதும் வாகன போக்குவரத்தால் நிரம்பி வழிகிறது. கொரோனா வெடித்து கிளம்பிய இடமான வெட் மார்க்கெட்டில் தவளைகள், மீன்கள் மற்றும் இறைச்சி வியாபாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.