சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்: மு.க.ஸ்டாலின் 500 பேருக்கு உதவிகளை வழங்கினார்

சென்னை: சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் 500 பேருக்கு நல உதவிகளை வழங்கினார். சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் மாநில தலைவர் ரெ.தங்கம் தலைமையில் நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இதில்,  திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. சங்க மாநிலத் தலைவர் ரெ.தங்கம், சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.சரவணகுமார், பொருளாளர் பா.வெங்கடேசன், க.இளங்கோவன் வி.சுகுமார், எஸ். பூபதி, மக்கள் தொடர்பு அலுவலர் தி.நகர் பா.சக்திவேல்,  கே.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: